ரசிகர்களால் உலக அழகி என்று அழைக்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்ற பிறகு இருவர் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீன்ஸ், எந்திரன், ராவணன், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, 2 போன்ற படங்கள நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய் .மேலும் இவர் தமிழ்,
தெலுங்கு ,ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .இதனிடையே கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல ஹிந்தி நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராய் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் .
இந்நிலையில் கடந்த 1 ம் தேதி தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார் நடிகை ஐஸ்வர்யா ராய். இதற்கு பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச்சன் “ஹேப்பி பர்த்டே ” என்று ஒரே வரியில் ,
அவருடைய புகைப்படத்தை போட்டு முடித்து விட்டார் . மேலும் ஐஸ்வர்யாராயுடன் நெருங்கி பழகியவர்களே பக்கம் பக்கமாக பதிவு போட்ட நிலையில் , அபிஷேக் பச்சன் இவ்வளவு சிம்பிளாக பதிவு போட்டது ரசிகர்களிடையே கேள்வி எழுப்பி உள்ளது .இதை பார்த்த ரசிகர்கள் அபிஷேக் பச்சனுக்கு ,
என்ன ஆச்சு .? இவ்வளவு சிம்பிளாக வாழ்த்து சொல்வதற்கு பதிலாக , வாழ்த்து சொல்லாமலேயே இருந்திருக்கலாம் என்று கொந்தளித்து வருகின்றனர் . இன்னும் சில பேர் கல்யாணம் ஆகிவிட்டால் , உலக அழகியாக இருந்தாலும் இதுதான் நிலைமை போல என்றும் கூறி வருகின்றனர்…