தமிழ் சினிமா உலகில் திருமணம் ஆகியும் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை நயன்தாரா . அந்த வகையில் தமிழில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகை என்ற ,
அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வரும் நயன்தாராவுக்கு தற்போது ஆறு மடங்கு சம்பளம் உயர்ந்துள்ளதாம். அந்த வகையில் ஆரம்பத்தில் நடிகையாக நடிக்கும் போது அதிகபட்ச சம்பளமாக இரண்டு கோடி வாங்கி வந்தாராம் நடிகை நயன்தாரா. இதன் பிறகு கதாநாயகிக்கு,
முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதற்கு மூன்று கோடி சம்பளம் வாங்கினாராம் . பின்னர் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தகுந்தவாறு தன்னுடைய சம்பளத்தை 4 லிருந்து 5 கோடி வரை உயர்த்தியுள்ளார் நடிகை நயன்தாரா. இதை அடுத்து சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில்,
வெளியான ஜவான் படத்திற்காக 10 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் நயன்தாரா . இதைத்தொடர்ந்து அடுத்ததாக மணிரத்னம்- கமல் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் நடிகை நயன்தாரா . இந்த படத்திற்காக 12 கோடி சம்பளம் வாங்க உள்ளாராம் .
மேலும் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளின் சம்பளம் உயர்ந்தாலும் ஒரு கட்டத்தில் அப்படியே தான் இருக்கும் . ஆனால் குறிப்பிட்ட வருடங்களிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா…