தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல நடிகராகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மனிதராகவும் இருந்து வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் . ஆனால் இவருடைய பெயர் தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமான் தான் . அந்த வகையில் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்த டி இமான் சிவகார்த்திகேயன் நடித்த பல திரைப்படங்களுக்கு,
இசையமைத்திருந்தார் . இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது . ஆனால் தற்போதுசிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்றும் , அந்த துரோகத்தை இந்த ஜென்மத்தில் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று பரபரப்பை,
கிளப்பியிருந்தார் இசையமைப்பாளர் டி இமான். இதைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயன் இவ்வளவு மோசமானவரா என்று கூறி வந்தனர் . ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது இமானுக்கும் , சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே தெரியும். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு ,
பல பிரபலங்கள் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் தப்பு செய்யாதவன் எதற்கும் பயப்பட தேவையில்லை என்று சொல்வது போல் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் . அந்த வகையில்,
ஆயுத பூஜையை தன்னுடைய அலுவலகத்தில் கொண்டாடி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…