April 22, 2024

எனக்கு காரெல்லாம் வேண்டாம் ..!! அது மட்டும் போதும் ..!! தயாரிப்பாளரிடம் சொல்லிய விஜய் ..!! இந்த காலத்தில் இப்படியொரு நடிகரா ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . குறிப்பாக சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து மிகப்பெரிய மார்க்கெட்டில் இருந்து வருகிறார் நடிகர் விஜய் . மேலும் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது .

அந்த வகையில் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 148 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதை தென்னிந்திய சினிமாவே தற்போது வியந்து பார்க்கிறது . குறிப்பாக இனி வரும் நாட்களில் இந்த திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடியை தொட்டு விடும் என்று,

இப்போதே கணிக்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யை  பற்றி ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்து இருக்கிறார்.  அந்த வகையில் மாஸ்டர் படத்தை  லலித் குமாரும் இணைந்து தயாரித்து இருந்தார் .  இப்படி வெளியான ,

திரைப்படம் சூப்பர் ஹிட்டானது .  இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு புதிய காரை பரிசாக  கொடுப்பதற்கு கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் லலித்குமார் .  ஆனால் நடிகர் விஜய் , சம்பளம் தரீங்க , அதுவே போதும் என்று சொல்லி வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.

இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு படம் ஹிட்டானலே  ஓவராக விளம்பரம் தேடும் நடிகர்களுக்கு மத்தியில்  இப்படி ஒரு நடிகரா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *