தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இன்னும் சொல்லப்போனால் தற்போது இவர் இல்லாத படங்களை கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு பிஸியான காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் யோகி பாபு . அது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து ,
அசத்தி வருகிறார் யோகி பாபு . மேலும் நடிகர் யோகி பாபு அதிகம் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனால் அடிக்கடி கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்து வருவார் நடிகர் யோகி பாபு . ஆனால் இப்படி கோயில் கோயிலாக சென்றும் கூட,
இவருக்கு மட்டமான புத்தி உள்ளதாம் . அந்த வகையில் யோகி பாபுவுக்கு மேக்கப் கலைஞராக இருந்தவர் வேலையை விட்டு திடீரென நின்று விட்டாராம் . இதற்கும் அவருக்கு ஒரு நாளைக்கு 8000 ரூபாய் சம்பளம் . அப்படி இருந்தும் அவர் வேலையில் இருந்து நிற்பதற்கு முக்கிய காரணம்,
அந்த 8000 சம்பளத்தை யோகி பாபு உடன் தான் கொடுப்பார்களாம். ஆனால் அந்த 8000 சம்பளத்தை வாங்கிக்கொண்டு அந்த மேக்கப் கலைஞருக்கு வெறும் 2000-ல் இருந்து 3000 ரூபாய் தான் கொடுப்பாராம் யோகிபாபு . இதை தெரிந்து கொண்ட மேக்கப் கலைஞர் மனம் உடைந்து,
இந்த வேலையே வேண்டாம் என்று சென்று விட்டாராம் . மேலும் ஒரு நாளைக்கு 10 முதல் 15 லட்சம் வரை சம்பளமாக வாங்கும் யோகி பாபு இப்படி மட்டமாக நடந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…