சமீப காலமாக சினிமா உலகில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்படி தமிழ் சினிமாவை கலக்கி வந்த சமந்தா , தனுஷ், அமலா பால் போன்ற பல பிரபலங்கள் விவாகரத்து செய்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது விஜய் பட நடிகை ஒருவரும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஷில்பா செட்டி தான் .
ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகை ஷில்பா செட்டி கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,
விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் நடித்திருந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி . மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு வருகிறார் . இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்தரா என்ற தொழிலதிபரை,
திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். இப்படி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தன்னுடைய கணவருடன் நன்றாக வாழ்ந்து வந்த ஷில்பா ஷெட்டி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியானது .
இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் ராஜ் குந்தரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று சொல்லி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் . இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…