April 29, 2024

சமந்தாவை தொடர்ந்து விஜய் பட நடிகையும் விவாகரத்து செய்துவிட்டாரா ..?? இரண்டு குழந்தைகள் இருக்கும் போது இப்படியொரு முடிவா ..?? அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!!

சமீப காலமாக சினிமா உலகில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.  அப்படி தமிழ் சினிமாவை கலக்கி வந்த சமந்தா , தனுஷ், அமலா பால்  போன்ற பல பிரபலங்கள் விவாகரத்து  செய்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது விஜய் பட நடிகை ஒருவரும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஷில்பா செட்டி தான் .

ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகை ஷில்பா செட்டி கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் நடித்திருந்தார் நடிகை ஷில்பா  ஷெட்டி . மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு வருகிறார் . இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்தரா என்ற தொழிலதிபரை,

திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  இப்படி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தன்னுடைய கணவருடன் நன்றாக வாழ்ந்து வந்த ஷில்பா ஷெட்டி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியானது .

இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் ராஜ் குந்தரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று சொல்லி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் . இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *