தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது . மேலும் நடிகர் விஜய் அரசியல் தெரியாமல் அகலக்கால் வைத்துள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர் . ஆனால் இவருக்கு முன்னோடியான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செய்ததைப் போல இவரும் செய்தால்தான் இவரால் அரசியலில் தாக்கு பிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது .அந்த வகையில் சினிமாவில் நடித்து,
ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே அறிஞர் அண்ணாவின் மீது கொண்ட பாசத்தால் அவருடைய திமுக கட்சியில் இணைந்தார் எம்ஜிஆர் . பின்னர் அண்ணா இறந்த பிறகு கருணாநிதி உடன் ஏற்பட்ட ,
மனகசப்பால் எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கினார். குறிப்பாக கட்சி தொடங்கிய பின்னரும் சினிமாவில் நடித்துக்கொண்டுதான் வந்தார் எம் ஜி ஆர் . அப்படி எம்எல்ஏவாக இருந்து வந்த எம்ஜிஆர் படிப்படியாக முதலமைச்சராக ஆனார். அப்படி அவர் முதலமைச்சரான பிறகு தான்,
சினிமாவை விட்டே விலகினார். ஆனால் விஜய் அப்படி கிடையாது. கட்சி ஆரம்பித்த முதல் நாளே இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் எம்எல்ஏவாக இருந்து பல வருட அரசியல் அனுபவத்தை ,
கற்ற பிறகு தான் முதலமைச்சர் ஆனார் . ஆனால் நடிகர் விஜய் அப்படி கிடையாது. மேலும் விஜய்க்கும் அரசியலைப் பற்றி முழுசாக தெரியாது, அவருடன் இருப்பவர்களும் யாரும் அரசியல் அனுபவசாலி கிடையாது . அப்படி இருக்கும் பட்சத்தில் ரசிகர்களை நம்பி அகலக்கால் வைத்திருக்கிறார் விஜய்…