தமிழ் சினிமாவை கலக்கி வந்த தரமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மாரிமுத்து . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து வந்த மாரிமுத்து கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார் . இதன் பிறகு இயக்குவதை நிறுத்திய மாரிமுத்து தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார். அப்படி இவர் நடித்திருந்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இதன் பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகர் மாரிமுத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஏஜிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் ,
நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் மாரிமுத்து . இப்படி இருக்கும் நிலையில் நேற்று திடீரென மாரடைப்பால் இவர் உயிரிழந்தது யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . இந்நிலையில் இறப்பதற்கு முன்பு அவருடைய கண்ணீர் அஞ்சலி ,
போஸ்டருக்கு முன்பு செல்பி எடுத்துரைக்கிறார் நடிகர் மாரிமுத்து. அந்த வகையில் விழா நாயகன் என்ற படத்தின் படப்பிடிப்பில் இறந்தது போல நடித்து இருக்கிறார் நடிகர் மாரிமுத்து. அப்போது தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு என்று செல்பி எடுத்து இருக்கிறார் ,
நடிகர் மாரிமுத்து. அப்படி படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சி தற்போது நிஜத்திலும் நடந்து விட்டதால் அந்தப் படத்தின் படக்குழுவினர்கள் மிகப்பெரிய சோகத்தில் இருந்த வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் …