தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர் . இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் , ஜாக்கி சரப் ,ரம்யா கிருஷ்ணன், தமன்னா ,சுனில் ,யோகி பாபு , வசந்த் ரவி என்று பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் .
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . மேலும் இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி வெளியாக உள்ளது . இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது . இந்நிலையில் காலா படத்தின் இசை வெளியீட்டு ,
விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் குறித்தும் கூறியிருந்தார் . அதில் அவர் கூறியதாவது, எந்திரன் படத்திற்கு பிறகு உடல்நல குறைவு ஏற்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க ஆசைப்பட்டேன் . அப்போதுதான் என்னுடைய மகள்,
அனிமேஷன் படத்தில் நடியிங்கள் என்று சொன்னார் . மேலும் என்னுடைய மகள் மிகவும் அதி புத்திசாலி . ஆனால் அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை . இதனால் அந்த படத்தின் மீது எனக்கும் நம்பிக்கை இல்லை . பின்னர் வெளியான இந்த திரைப்படம்,
சரியாக போகவில்லை . அதன் பிறகு தான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் அதி புத்திசாலிகளின் பேச்சைக் கேட்கக் கூடாது , அவர்களுடன் பழகக் கூடாது என்று .தற்போது அவர் கூறிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …