தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய படங்களுக்கு தொடர்ச்சியாக டி. இமான் மற்றும் அனிருத் இசையமைத்து வந்தார்கள். அப்படி சிவகார்த்திகேயன் – டி இமான் கூட்டணியில் வெளியான மனம் கொத்தி பறவை ,வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன் ,சீம ராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்கள்,
சூப்பர் ஹிட் அடித்தது . இதனால் டி இமானும், சிவகார்த்திகேயனும் அண்ணன் , தம்பி போல பழகி வந்தனர். இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் டி இமானுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என்றும் , இமானின் விவாகரத்துக்கு முக்கிய காரணமே,
சிவகார்த்திகேயன் தான் என்றும் , இமானின் மனைவிக்கும் , சிவகார்த்திகேயனுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்றும் தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . அது மட்டுமில்லாமல் டி இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை,
எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் இது குறித்து பேசிய டி இமானின் முதல் மனைவி கூறியதாவது, சிவகார்த்திகேயன் ஒரு நல்ல மனிதர். நாங்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்ததும் , அதை சமரசம் செய்யத் தான்,
வந்தார் என்று கூறியிருந்தார் டி இமானின் முதல் மனைவி . ஆனால் சிவகார்த்திகேயன் மீது இமானுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை , அவர்தான் தற்போது அவர் மீது அபாண்டமான பழியை போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது…