கடந்த சில தினங்களாக நடிகர் சிவகார்த்திகேயன் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இதற்குக் காரணம் இசையமைப்பாளர் டி இமான் கிளப்பிய சர்ச்சை தான் . அந்த வகையில் இசையமைப்பாளர் டி இமானும், சிவகார்த்திகேயனும் அண்ணன் தம்பி போல பழகி வந்தனர் .இப்படி நல்ல நட்புடன் பழகி வந்த டி இமானுக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது .
இதனால் சிவகார்த்திகேயனின் பெயர் பெரிய அளவில் அடிபட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியத்தை ஓபன்னாக கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில்,
வெளியான நம்ம வீட்டு பிள்ளை மற்றும் கனா போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி நம்ம வீட்டு பிள்ளை படத்தின் படப்பிடிப்பிற்காக குற்றாலத்திற்கு சென்று இருந்தார்களாம் . அப்போது படக்குழுவினர்கள் அனைவரும் டீ, காப்பி ,
குடித்துக் கொண்டிருக்கும் போது சிவகார்த்திகேயன் மட்டும் குடிக்கவில்லையாம் . ஏன் குடிக்கவில்லை என்று கேட்டதற்கு அதெல்லாம் நான் குடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் சிவகார்த்திகேயன் . மேலும் சிவகார்த்திகேயனுக்கு போதைப்பழக்கம் , புகை பிடிக்கும் பழக்கம் ,
என்று எதுவும் கிடையாது. ஆனால் அவருக்கு அதிகமாக ஸ்வீட் சாப்பிடும் பழக்கம் மட்டும் உள்ளது. அதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…