தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை அதிதி ஷங்கர் . முன்னணி இயக்குனரான ஷங்க ரின் மகளான அதிதி ஷங்கர் கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் நடித்திருந்தார் நடிகை அதிதி ஷங்கர் .
இப்படி இவர் நடித்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் அந்த மாதிரி படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லி உள்ளாராம் நடிகை அதிதி ஷங்கர் . அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின்,
இரண்டாம் பாகத்தை மீண்டும் எடுக்க உள்ளாராம். இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே நடிக்க உள்ளாராம் . கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம் . காரணம் இந்த படத்தில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்றுதான் இப்படி கூறியிருக்கிறார் .
ஆனால் இந்த படத்தின் முதல் பாகத்திலேயே படுக்கையறை காட்சிகள் , இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவைகள் இடம் பெற்றது. அது மட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவன் படம் என்றால் கண்டிப்பாக அது மாதிரியான காட்சிகள் இடம் பெறும் . அப்படி இருக்கும் போது ,
யோசனையை இல்லாமல் அதிதி ஷங்கர் ஓகே சொல்லியது தான் தற்போது இயக்குனர் ஷங்க ருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது . இதனால் இந்த படத்தில் இவர் நடிப்பாரா நடிக்க மாட்டாரா என்பது விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது…