தற்போது உள்ள காலகட்டத்தில் பணத்திற்காக உச்சகட்ட கவர்ச்சியில் நடித்து வருகிறார்கள் ஒரு சில நடிகைகள். ஆனால் தமிழ் சினிமாவில் எத்தனை கோடி கொடுத்தாலும் கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன் என்று இரண்டு நடிகைகள் இருந்துள்ளனர் . அவர்கள் வேறு யாரும் இல்லை நடிகை ஷாலினி மற்றும் நதியா தான் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக ,
நடித்து வந்த ஷாலினி காதலுக்கு மரியாதை என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார் நடிகை ஷாலினி , ஆனால் எத்தனை கோடி,
கொடுத்தாலும் கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்திருக்கிறார் நடிகை ஷாலினி. இதன்பிறகு தான் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஷாலினி . இவரைத் தொடர்ந்து நடிகை நதியா ,
பூவே பூச்சூடவா என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நதியா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார் . குறிப்பாக அப்போது முன்னணி நடிகர்களின் படங்களின் ,
கலக்கிக் கொண்டு வந்த நதியாவும் கவர்ச்சிக்கு மட்டும் நோ சொல்லிவிட்டாராம் . தமிழ் சினிமாவில் இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில நடிகைகளும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்து வருகின்றனர்…