தற்போது தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது நடிகர் விஜய் மட்டும்தான். இதற்கு முக்கிய காரணம் தற்போது விஜய் அரசியலில் களமிறங்க உள்ளதால் தான் இது போன்ற விஷயங்கள் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அப்படி அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள,
லியோ படத்திற்கு நாலா பக்கத்தில் இருந்தும் பிரச்சனைகள் எழுந்து வருகிறது .ஆனால் இன்று விஜய் அனுபவித்த வேதனையை விட அதிகம் அனுபவித்திருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அந்த வகையில் கடந்த 1973 ஆம் ஆண்டு,
எம்ஜிஆர் இயக்கி நடித்த திரைப்படம் தான் உலகம் சுற்றும் வாலிபன் .இந்த நேரத்தில்தான் எம்ஜிஆர் திமுகவை விட்டு அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். இதனால் இவருடைய படத்தை வெளியிடவே விடக்கூடாது என்று பலரும் கங்கணம்,
கட்டி திரிந்தனர் . இன்னும் சொல்ல போனால் இந்த படம் வெளியாகிறது என்று சுவரொட்டி விளம்பரத்திற்கு வரியை ஏற்றி அலப்பறை செய்தார்கள் . அதையும் மீறி விளம்பரம் இல்லாமல் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
அப்படி வெளியான ஒரு சில திரையரங்குகளில் மின் துண்டிப்பையும் ஏற்படுத்தியுள்ளார்கள் . அப்படி இருந்தும் கூட உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது…