பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் நடிகர்களை விட நடிகைகள் தான் அதிகமாக படித்திருக்கிறார்கள் . அந்த வகையில் தமிழ் சினிமாவிலேயே அதிகம் படித்த ஒரே நடிகை இவர் தானாம் . அவர் வேறு யாருமில்லை நடிகை சாய் பல்லவி தான் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகை சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மூலம்,
கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் நடிகை சாய் பல்லவி. பின்னர் தமிழில் வெளியான தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சாய் பல்லவி.
இந்த படத்தை தொடர்ந்து என் ஜி கே, பாவ கதைகள், கார்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் .
மேலும் நடிகை சாய் பல்லவி நல்ல நடிகை என்பதை தாண்டி நல்ல மருத்துவர் என்றுதான் சொல்ல வேண்டும். . அந்த வகையில் ஜார்ஜியாவில் உள்ள பிரபல மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி . தமிழ் சினிமாவில் இருக்கும்,
திரிஷா ,நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமந்தா போன்ற பல நடிகைகள் படித்திருந்தாலும் , அதில் சாய்பல்லவி தான் பெரிய படிப்பு படித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…