ரஞ்சிதா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான நாடோடி தென்றல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரஞ்சிதா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பொண்டாட்டி ராஜ்ஜியம், வால்டர் வெற்றிவேல் ,அமைதிப்படை, ஜெய்ஹிந்த் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டு நித்தியானந்தா உடன் செட்டிலானார் .
இப்படி இருக்கும் நிலையில் நித்யானந்தா தற்போது கைலாசா என்ற ஒரு நாட்டையே உருவாக்கி வாழ்ந்து வருகிறார் . மேலும் பல வருடங்களாக நித்யானந்தாவுக்கு ஜால்ரா அடித்து வந்த ரஞ்சிதா தற்போது இப்படி ஒரு பொறுப்பில் இருந்து வருகிறாராம் . அந்த வகையில் கைலாசாஎன்ற நாட்டின்பிரதமராக ரஞ்சிதா உள்ளாராம் .
அப்படி இவர்களுக்கென்று ஒரு சமூக வலைத்தள பக்கத்தை திறந்து அதில் தனித்த இறையாண்மை கொண்ட கைலாசாவின் பிரதமர் என்றும் இந்துக்களுக்கான முதல் தேசம் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதற்காகத்தான் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா இருந்து வந்தாரா என்று கூறி வருகின்றனர்…