மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . இளம் வயதிலேயே சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்த விஜயகாந்த் பல வருட போராட்டத்திற்கு பிறகு இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் தான் .
இந்த படத்திற்கு பிறகு தான் விஜயகாந்த் என்றால் யார் என்று அனைவருக்கும் தெரிய தொடங்கியது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் ,அன்னை பூமி, அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள் ,கூலிக்காரன் ,பூந்தோட்ட காவல்காரன்,
செந்தூரப்பூவே, புலன் விசாரணை ,கேப்டன் பிரபாகரன் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் விஜயகாந்த் . குறிப்பாக 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் விஜயகாந்த் இதுவரை தமிழ் மொழியை தவிர ,
மற்ற மொழி படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் விஜயகாந்த். திருமணமான இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் .
குறிப்பாக மகன்கள் என்றால் அவ்வளவு உயிராக இருப்பாராம் விஜயகாந்த். இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…