தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இன்னும் சொல்லப் போனால் படத்தின் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்கள் முன்னணி ஹீரோக்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் , அஜித் போன்ற நடிகர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்தார்கள் .
ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தை குறைத்து 90 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி வருகிறாராம் . இவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்த படத்திற்கு 200 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . அப்படி விஜய் மட்டும் 200 கோடி சம்பளம்,
வாங்கி விட்டால் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக மாறிவிடுவார் என்று கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் நான் மட்டும் சும்மாவா என்று அஜித்தும் தன்னுடைய பங்குக்கு சம்பளத்தை ஏற்றி இருக்கிறார் . அந்த வகையில் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி,
இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்திற்காக அஜித்துக்கு 1௦5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது . இதைத்தொடர்ந்து அடுத்ததாக மார்க்ஆண்டனி படத்தில் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க ,
இருக்கிறார் அஜித். இந்த படத்திற்காக அஜித்துக்கு 163 கோடி சம்பளம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாலும் ரசிகர்களுக்கு ஒரு ரூபாய் செலவு செய்ய இவர்களுக்கு மனசு வருதா என்று கூறி வருகின்றனர்…