April 24, 2024

6 மாசமா அந்த கொடுமையை அனுபவித்தேன் ..!! உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ் ..!! கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நடிகை ..!!

தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார் . அது மட்டுமல்லாமல் நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று,

சாதனை படைத்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இப்படி இருக்கும் நிலையில் ஆறு மாசம் அந்த கொடுமையை நானும் அனுபவித்தேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . அந்த வகையில் நடிகையர் திலகம் படத்தை முடித்து ஆறு மாதம் ஆகியும் ,

இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வரவில்லையாம் . இதனால் பல கஷ்டங்களை எதிர்கொண்டாராம் நடிகை கீர்த்தி சுரேஷ் . மேலும் இவருக்கு அப்போது வந்த கதைகள் எல்லாம் பெண்களை மையப்படுத்தி மட்டுமே இருந்ததாம்.  ஆனால் இவருக்கு கமர்சியல் படங்களில் நடிக்க வேண்டும்,

என்ற ஆசை இருந்ததாம் . இதனால் ஆறு மாசமாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த கீர்த்தி சுரேஷ்,  ஒரு கட்டத்தில் இனி வரக்கூடிய வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாராம்.  அதன் பிறகு தான் ஒரு சில நல்ல படங்கள் இவருக்கு,

கிடைத்ததாம் . ஆனால் சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  அப்படியே வரவேற்பை பெற்றாலும் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *