தமிழ் தொலைக்காட்சி சீரியலை கலக்கி கொண்டு வரும் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் நடிகை மகாலட்சுமி. ஏற்கனவே திருமணமான மகாலட்சுமி அவருடைய கணவரை விவாகரத்து செய்த பிறகு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மேலும் இவர்கள் திருமணமான போது ரசிகர்களின் கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆளானார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்,
இருவரும் நன்றாக வாழ்ந்து வந்தனர் . இப்படி இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணமோசடியில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார் ரவிந்தர் . பின்னர் சிறையிலிருந்து மீண்டும் வந்த ரவீந்தர் தற்போது தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார் .
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரவீந்தர் குறித்து மகாலட்சுமி கூறியதாவது, அவருடைய உடல் எடையை குறைப்பதற்காக நாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தோம் . ஆனால் அவர் அந்த டயட்டை சரியாக பின்பற்றுவது இல்லை. குறிப்பாக அவருடன்,
இருக்கும் போது என்னாலையும் அந்த டயட்டை பின்பற்ற முடியவில்லை. இதனால் நான் தூங்கிக் கொண்டிருந்தாலும் , என்னை எழுப்பி சாப்பிட வைத்து விடுகிறார். இந்த காரணத்தினால் என்னாலும் டயட்டை சரியாக மெயின்டைன் செய்ய முடியவில்லை. மேலும் நான் ,
அதிகமாக சாப்பிட மாட்டேன் . ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தான் எழுந்திருப்பேன் என்று கூறி இருந்தார் நடிகை மகாலட்சுமி…