கடந்த 1987 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எங்க ஊரு பாட்டுக்காரன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்திப்பிரியா . இவர் வேறு யாரும் இல்லை நடிகை பானுப்பிரியாவின் தங்கைதான் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து ஒன்று எங்கள் ஜாதியே,
ரயிலுக்கு நேரமாச்சு ,என் வழி தனி வழி, பூவிழி ராஜா ,அஞ்சலி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சாந்திப்பிரியா . கடைசியாக இவர் ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்ற படத்தில் நடித்திருந்தார் . இதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில்,
கலக்கிக்கொண்டு வந்தார் சாந்திப்பிரியா. பின்னர் திருமணமான பிறகு நடிப்பதையே நிறுத்திவிட்டார் நடிகை சாந்திப்பிரியா . இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 34 வருடங்கள் கழித்து இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் இணைய உள்ளாராம் நடிகை சாந்திப்பிரியா.
அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத் இயக்கவுள்ள புதிய படத்தில் சாந்திப்பிரியா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம் . இந்தத் திரைப்படம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ளதாம் .
குறிப்பாக 54 வயதாகியும் கூட இன்னும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருந்து வருகிறார் நடிகை சாந்திப்பிரியா. இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களும் பாருங்க …