90 களின் ரசிகர்களை தன்னுடைய கவர்ச்சியால் மயக்கி வைத்திருந்தவர் தான் நடிகை ரம்பா . தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ரம்பா கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,
சுந்தர புருஷன் ,அருணாச்சலம் ,நினைத்தேன் வந்தாய் ,காதலா காதலா ,காதலர் தினம் ,சுயம்வரம் ,ஆனந்தம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ரம்பா . மேலும் நடிகை ரம்பா தமிழ் மொழி மட்டுமல்லாமல்,
தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா .
திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் ,ஒரு மகன் உள்ளனர். மேலும் திருமணத்துக்கு பிறகு கனடாவிலேயே செட்டில் ஆகிவிட்டார் நடிகை ரம்பா. இப்படி இருக்கும் நிலையில் வெளிநாடு சென்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கிறார் நடிகை ரம்பா .
அந்த வகையில் நேற்று அவருடைய வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பு பூஜை ஒன்றை நடத்தி இருக்கிறார் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…