திவ்யதர்ஷினி ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிமற்றும் நடிகை ஆவார். தமிழ் ரசிகர்களால் செல்லமாக டிடி என்று அழைக்கப்பட்டு வரும் திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியின் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் டிடி. இருந்தாலும் ரசிகர்களுக்கு ,
மிகவும் பிடித்தது “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சி தான் . இப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டு வந்த டிடி தமிழில் வெளியான பவர் பாண்டி ,சர்வம் தாள மையம் ,காபி வித் காதல் ,துருவ நட்சத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இதனிடையே,
கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி . ஆனால் திருமணமான மூன்று வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டிடி,
கூறியதாவது , என்னைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் . நான் 14 வயதிலேயே பப்புகளுக்கும் , பார்ட்டிகளுக்கும் சென்று இருக்கிறேன். அந்த நேரத்தில் என்னுடைய அம்மா அதற்கெல்லாம் அனுமதிக்கவில்லை . ஆனால் என்னுடைய அப்பா தைரியமாக ,
என்னை போ என்று அனுப்பி வைத்தார் . காரணம் நான் குடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கை தான். குறிப்பாக இப்போது கூட என்னை சுற்றி 100 பேர் குடித்தாலும் கூட நான் குடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக சொல்லி இருந்தார் டிடி…