தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா. மேலும் எந்த நடிகைக்கும் கிடைக்காத லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்த நயன்தாராவுக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது . அப்படி தனக்கு கிடைத்த பட்டத்தை பல வருடங்களாக தக்கவைத்து வருகிறார் நடிகை நயன்தாரா . மேலும் ஆரம்பத்தில் பல நடிகர்களுடன் காதலுக்கு கிசுகிசுவில் சிக்கிய நயன்தாரா ,
கடைசியில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணமாகி சில மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா . இந்த விஷயம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதை எல்லாம் சட்ட ரீதியாக எதிர்கொண்டார் நடிகை நயன்தாரா . இந்நிலையில் தன்னுடைய இரட்டை ஆண் குழந்தைகளின் முகத்தை பல மாதங்களாகவே வெளியுலகத்துக்கு காட்டாமல் இருந்து வந்தார் நடிகை நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவின் மகன்களுக்கு,
ஒரு வயது ஆகிவிட்டதாம் . அப்படி தன்னுடைய மகன்களான உயிர் மற்றும் உலகின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் முதன்முறையாக மகன்களின் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா. அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில்,
வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஊர் கண்ணே பட்டுரும் போல, மகன்களுக்கு சுத்தி போடுங்க என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …