தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி. ஆரம்பத்தில் இருந்தே காமெடி கலந்த படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த சுந்தர் சி சமீபகாலமாக புளிச்சுப்போன கதையை ரசிகர்களுக்கு காட்டி சோதித்து வருகிறார் . அப்படி கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அரண்மனை . இந்த படத்தில் சுந்தர்சியுடன் இணைந்து வினய் ,ஹன்சிகா,
ஆண்ட்ரியா ,ராய் லட்சுமி ,சந்தானம் ,கோவை சரளா , மனோபாலா போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் சுந்தர் சி . இந்தப் படமும் ஓரளவிற்கு,
வெற்றியை பெற்றது. பின்னர் இதோடு நிறுத்தாமல் மூன்றாம் பாகத்தையும் எடுத்து ரசிகர்களை சலிப்பில் ஆழ்த்தினார் சுந்தர் சி. குறிப்பாக அரண்மனை மூன்றாம் பாகம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அப்படி இருந்தும் கூட தற்போது அரண்மனை 4 படத்தை கையில்,
எடுத்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி . இந்தப் படத்தில் சுந்தர்சியுடன் இணைந்து தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு ,கோவை சரளா, சிங்கம் பு,லி டெல்லி கணேஷ் ,வி டிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் போன்ற பல நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளார்களாம். இந்த படத்திற்கு,
ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க உள்ளார் . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் உலகமே அழிந்தாலும் இவர் அரண்மனை படத்தை விட மாட்டார் போல என்று கூறி வருகின்றனர் …