April 22, 2024

கடன் தொல்லை தாங்கமுடியாமல் ..!! சம்பளத்தை ஏற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் ..!! அடேங்கப்பா , இத்தனை கோடி கேட்கிறாரா ..?? ஆடிப்போன தயாரிப்பாளர் ..!!

தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . எந்த ஒரு சினிமா பின்புலமும்  இல்லாமல் இன்று தமிழ் சினிமாவில் தனித்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  குறிப்பாக இவருடைய நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படங்களாக அமைந்து வருகிறது .

இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சத்தில் இருந்து வருகிறது . ஆனால் இடையில் படம் தயாரிக்கிறேன் என்று இறங்கி பெரிய கடன்காரன் ஆகிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.  அது மட்டுமல்லாமல் இவருடைய படத்தின் நஷ்டத்தையும் தானே ஏற்க போவதாகவும்,

கூறியிருந்தார் . அப்படி பல கோடி கடனில் சிக்கிக் கொண்டு தவித்த  நடிகர் சிவகார்த்திகேயன் வேறு வழி இல்லாமல் தற்போது தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டாராம் . அந்த வகையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ள,

புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.  இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் 70 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.  ஆனால் இதற்கு முன்பு இவர் நடித்த படங்களுக்கு,

20 முதல் 35 கோடி வரை தான் சம்பளம் கேட்டு இருந்தாராம் . அப்படி இருந்த நிலையில் இவர் திடீரென இந்த படத்திற்கு இவ்வளவு சம்பளம் கேட்டது தயாரிப்பாளருக்கு தலைசுற்றி போனதாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *