சூர்யா ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட டாப் நடிகர்களில் ஒருவர் ஆவார். மூத்த நடிகரான சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் . ஆரம்பத்தில் பல சறுக்கல்களை சந்தித்தாலும் பின்னர் தரமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சூர்யா.
அதுவும் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் நடிகர் சூர்யா . தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறா ர். பின்னர் இந்த படத்தை ,
முடித்த கையோடு இயக்குனர் சுதா கொங்காரா இயக்கும் படத்திலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்க இருக்கிறார் நடிகர் சூர்யா . இப்படி இருக்கும் நிலையில் 28 வருடங்களுக்குப் பிறகு முக்கியமான ஒருவரை சந்தித்து இருக்கிறார் நடிகர் சூர்யா.
அவர் வேறு யாருமில்லை சூர்யா லயோலா கல்லூரியில் படிக்கும் போது பேராசிரியராக இருந்தவரை தான் . அந்த வகையில் கடந்த 1995 ஆவது பேச்சில் சூர்யா படிக்கும் போது அவருக்கு எச் ஓ டியாக இருந்த ராபர்ட் என்பவரை 28 வருடங்களுக்குப் பிறகு சந்தித்து அவரை நிகழ்ச்சியில்,
ஆழ்த்தியுள்ளார் நடிகர் சூர்யா . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் இவர்தான் உண்மையான மாணவன் என்று கூறி வருகின்றனர்…
View this post on Instagram