May 3, 2024

அந்த விஷயத்தில் தெளிவா இருக்கேன் ..!! அதனால் தான் சர்ச்சையில் சிக்காமல் இருக்கேன் ..!! வெளிப்படையாக சொல்லிய அம்மு அபிராமி ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை அம்மு அபிராமி.  கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பைரவா என்ற படத்தின்  மூலம் அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது தீரன் அதிகாரம் ஒன்று , ராட்சசன் போன்ற படங்களின் மூலம்தான் . இந்த இரண்டு திரைப்படங்களுமே ,

இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் அவருக்கு ஜோடியாகவே நடித்து அசத்தியிருந்தார் அம்மு அபிராமி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து யானை ,பேட்டரி ,காரி, தண்டட்டி ,கண்ணகி ,போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

இதை அடுத்து தற்போது எட்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் அம்மு அபிராமி . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட  நடிகை அம்மு அபிராமியிடம் இதுவரை சர்ச்சையில் சிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளனர் .

அதற்கு பதிலளித்த அம்மு அபிராமி கூறியதாவது,  நான் தனிப்பட்ட வாழ்க்கையையும்,  சினிமா வாழ்க்கையையும் தனித்தனியாக தான் பார்க்கிறேன்.  என்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து யார் விமர்சித்தாலும் , நான் கண்டுகொள்ள மாட்டேன் .ஆனால் என்னுடைய தனிப்பட்ட,

வாழ்க்கை குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் . இதனால் தான் நான் எந்த பேட்டியில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச மாட்டேன் என்று கூறியிருந்தார் அம்மு அபிராமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *