தற்போது தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை அம்மு அபிராமி. கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பைரவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது தீரன் அதிகாரம் ஒன்று , ராட்சசன் போன்ற படங்களின் மூலம்தான் . இந்த இரண்டு திரைப்படங்களுமே ,
இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் அவருக்கு ஜோடியாகவே நடித்து அசத்தியிருந்தார் அம்மு அபிராமி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து யானை ,பேட்டரி ,காரி, தண்டட்டி ,கண்ணகி ,போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
இதை அடுத்து தற்போது எட்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் அம்மு அபிராமி . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அம்மு அபிராமியிடம் இதுவரை சர்ச்சையில் சிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளனர் .
அதற்கு பதிலளித்த அம்மு அபிராமி கூறியதாவது, நான் தனிப்பட்ட வாழ்க்கையையும், சினிமா வாழ்க்கையையும் தனித்தனியாக தான் பார்க்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து யார் விமர்சித்தாலும் , நான் கண்டுகொள்ள மாட்டேன் .ஆனால் என்னுடைய தனிப்பட்ட,
வாழ்க்கை குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் . இதனால் தான் நான் எந்த பேட்டியில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச மாட்டேன் என்று கூறியிருந்தார் அம்மு அபிராமி…