ரிஷப் ஷெட்டி ஒரு பிரபலமான கன்னடா திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ரிஷப் ஷெட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ரிக்கி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காந்தாரா ,
திரைப்படம் இவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. இதை அடுத்து தற்போது காந்தாரா 2 படத்தை பிசியாக இயக்கிக் கொண்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய சொந்த ஊரில் இருக்கும தன்னுடைய சொந்த ஊரில் இருக்கும் அரசு பள்ளியை,
தத்தெடுத்துள்ளாராம் நடிகர் ரிஷப் ஷெட்டி. இனிமேல் இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நானே செய்து கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளாராம் ரிஷப் ஷெட்டி. இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…