மறைந்த பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரு பாடகர் மட்டுமில்லாமல் நடிகர் ,இசையமைப்பாளர் ,டப்பிங் கலைஞர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கடந்த 1966 ஆம் ஆண்டிலிருந்து தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய எஸ் பி பாலசுப்ரமணியம் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத பாடகராக இருந்து வந்தார் . குறிப்பாக எல்லா நடிகர்களுக்கும் இவருடைய குரல் கச்சிதமாக ,
பொருந்தும் . இதனாலேயே இவருடைய கால் சீட்டுக்காக பல இசையமைப்பாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர் . அதுவும் இளையராஜா – எஸ்பிபி கூட்டணியில் வெளியான பாடல்கள் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என ,
மொத்தம் 16 மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார் . இப்படி கொடிகட்டி பறந்து வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலத்குறைவால் இறந்துவிட்டார் , அவர் மறைந்தாலும் அவருடைய பாடல்கள் இன்னும்,
மக்களிடையே ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இன்று எஸ்பிபி அவர்களுக்கு மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலியாம் . தற்போது அவருடைய பழைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது …