April 30, 2024

சூர்யா , கார்த்தியை தொடர்ந்து ..!! சென்னை மக்களுக்காக நிதியுதவி கொடுத்த இளம் நடிகர் ..!! 100 கோடி , 150 கோடி வாங்கும் நடிகர்கள் எல்லாம் ..!! இவரை பார்த்து கத்துக்கணும் ..!!

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மக்கள் வெள்ளத்தால் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள் . அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் சென்னையையே சூறையாடியது . இதனால் ரோடு எல்லாம் தண்ணீர் வெல்லமாக ஓடி வீட்டிற்குள் எல்லாம் புகுந்தது.  இதனால் கரண்ட் இல்லாமல் , சாப்பாடு இல்லாமல் அத்தியாவசிய தேவைக்காகவே சென்னை மக்கள் பெரிய அளவில் அவதிப்பட்டனர் .

மேலும் அவர்களுக்காக சென்னை மாநகராட்சி இரவு பகல் பார்க்காமல் உதவி செய்து வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் இது போன்ற நேரங்களில் மனிதநேயம் தோற்காமல் இருந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் சென்னை மக்களுக்கு உதவி செய்வதற்காக ,

சூர்யா மற்றும் கார்த்தி 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருந்தார்கள் . தற்போது இவர்களை தொடர்ந்து இன்னொரு நடிகரும் தன்னால் முடிந்த நிதி உதவியை கொடுத்திருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை நடிகர் ஹரிஷ் கல்யாண் தான் . அந்த வகையில் சென்னை வெள்ளத்தில்,

அவதிப்படும் மக்களுக்காக தன்னால் முடிந்த ஒரு லட்சம் ரூபாயை தமிழக அரசுக்கு நிதி உதவியாக கொடுத்திருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண் . அவர் போட்ட பதிவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது . இப்படி ஒரு வளர்ந்து வரும் நடிகரே தன்னால் முடிந்த உதவியை,

 

 

செய்து வரும் நிலையில் , 100 கோடி,  200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் எல்லாம் சுத்தமாக கண்டுகொள்ளாதது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *