2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மக்கள் வெள்ளத்தால் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள் . அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் சென்னையையே சூறையாடியது . இதனால் ரோடு எல்லாம் தண்ணீர் வெல்லமாக ஓடி வீட்டிற்குள் எல்லாம் புகுந்தது. இதனால் கரண்ட் இல்லாமல் , சாப்பாடு இல்லாமல் அத்தியாவசிய தேவைக்காகவே சென்னை மக்கள் பெரிய அளவில் அவதிப்பட்டனர் .
மேலும் அவர்களுக்காக சென்னை மாநகராட்சி இரவு பகல் பார்க்காமல் உதவி செய்து வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் இது போன்ற நேரங்களில் மனிதநேயம் தோற்காமல் இருந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் சென்னை மக்களுக்கு உதவி செய்வதற்காக ,
சூர்யா மற்றும் கார்த்தி 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருந்தார்கள் . தற்போது இவர்களை தொடர்ந்து இன்னொரு நடிகரும் தன்னால் முடிந்த நிதி உதவியை கொடுத்திருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை நடிகர் ஹரிஷ் கல்யாண் தான் . அந்த வகையில் சென்னை வெள்ளத்தில்,
அவதிப்படும் மக்களுக்காக தன்னால் முடிந்த ஒரு லட்சம் ரூபாயை தமிழக அரசுக்கு நிதி உதவியாக கொடுத்திருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண் . அவர் போட்ட பதிவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது . இப்படி ஒரு வளர்ந்து வரும் நடிகரே தன்னால் முடிந்த உதவியை,
My humble contribution.
கை கோர்ப்போம் #Chennai 💪#ChennaiFloodRelief #chennaifloods @CMOTamilnadu pic.twitter.com/CiqBV4SCsm— Harish Kalyan (@iamharishkalyan) December 6, 2023
செய்து வரும் நிலையில் , 100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் எல்லாம் சுத்தமாக கண்டுகொள்ளாதது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது…