தமிழ் சினிமா உலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அசோகன் இயக்கத்தில் முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சுந்தரா ட்ராவல்ஸ். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ராதா. இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற ராதா பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கேம் ,அடாவடி ,காத்தவராயன் போன்ற படங்களில்,
நடித்திருந்தார். இதன் பிறகு ஒரு கட்டத்தில் நடிப்பதே நிறுத்திய ராதா பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு பாரதிகண்ணம்மா 2 சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நான் செய்த தப்பை யாரும் பண்ணிடாதீங்க என்று இளம் நடிகைகளுக்கு எச்சரிக்கை கொடுத்து,
வருகிறார் நடிகை ராதா. அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது , என்னுடைய முதல் கணவரை பிரிந்த பிறகு உதவி ஆய்வாளராக இருந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அவர் அடித்து துன்புறுத்தினார். மேலும் எனக்கு சிறுவயதிலிருந்தே ,
நடிப்பது தான் ஒரு லட்சியமாகவே இருந்தது. ஆனால் கல்யாணமான பிறகு பிள்ளை குட்டி என்று இருந்து விட்டேன். இதுதான் என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு . இதை நான் செய்திருக்கவே கூடாது . மேலும் என்னுடைய வேலையை புரிந்து கொண்ட ஒருவரை நான்,
திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் . குறிப்பாக உங்களை புரிந்து கொண்டவரை மட்டுமே வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுங்கள் . இல்லையென்றால் தனியாக கூட இருந்து விடுங்கள் என்றும் , இதுதான் நான் இளம் நடிகைகளுக்கு சொல்லும் அட்வைஸ் என்று கூறியிருந்தார் நடிகை ராதா…