மூத்த நடிகரான சிவகுமாரின் வாரிசுகள் தான் சூர்யா மற்றும் கார்த்தி. இருவருமே தற்போது தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கியமான நடிகர்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக இருவருக்குமே பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இதில் நடிகர் சூர்யா நடிப்பதை தாண்டி அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பல ஏழை எளிய மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருகிறார் . இப்படி இந்த விஷயத்தில் ,
சூர்யா கெட்டிக்காரராக இருந்தாலும் அந்த விஷயத்தில் கார்த்தி தான் கெட்டிக்காரராக இருக்கிறார் . அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை கார்த்தியின் கதை தேர்வு ரொம்ப வித்தியாசமாகவே இருக்கும். அப்படி படத்திற்கு படம் வேறு வேறு கதாபாத்திரத்தில்,
நடிப்பதற்கு தான் விரும்புவாராம் நடிகர் கார்த்தி. அந்த வகையில் தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கி வரும் ஜப்பான், 96 இயக்குனர் இயக்க உள்ள புதிய படம் ,நலன் குமாரசாமி இயக்க உள்ள புதிய படம் என்று நாலு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் கார்த்தி.
இந்த மூன்று இயக்குனர்களுமே கொஞ்சம் தனித்துவமான இயக்குனர்கள் . இதனால் இந்த படங்கள் மூலம் கார்த்திக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நடித்த பிறகு ,
நவரசா எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து மோசமான வரவேற்பையே பெற்றார் . இதனால் வரும் காலங்களிலாவது தம்பியை பார்த்து நல்ல இயக்குனர்களுடன் சூர்யா கூட்டணி சேர வேண்டும் என்று கூறப்படுகிறது…