தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன் . கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் அசோக் செல்வன் . பின்னர் இந்த தொடர்ந்து தெகிடி ,கூட்டத்தில் ஒருத்தன் ஓ மை கடவுளே ,சில நேரங்களில் சில மனிதர்கள் ,மன்மத லீலை, நித்தம் ஒரு வானம் ,போர் தொழில் என்று தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை,
தேர்வு செய்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் அசோக் செல்வன் ஒரு பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பதவி வந்தது . அவர் வேறு யாருமில்லை அவருடைய சகோதரி தான் . இதுவரை நடிகர் அசோக் செல்வனின் குடும்ப புகைப்படங்கள்,
எதுவும் இணையத்தில் வெளியானது இல்லை. இந்நிலையில் முதல்முறையாக அவருடைய சகோதரியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவரும் பார்ப்பதற்கு ஹீரோயின் போல தான் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்…