பொதுவாகவே சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு காதல் டார்ச்சர் அதிகமாகவே இருக்கும் . அப்படி இருக்கும்போது என்னை இதுவரை யாருமே காதலித்தது கிடையாது என்று வெளிப்படையாக கூறியுள்ளார் கமல் பட நடிகை ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை ஷிவானி நாராயணன் தான் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷிவானி நாராயணன்.
பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாரயணன் . இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமான ஷிவானிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது . அந்த வகையில் கடந்த வருடம்,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஷிவானி நாராயணன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வீட்டில் விசேஷம் ,டிஎஸ்பி ,நாய் சேகர் ரிட்டன்ஸ் ,பம்பர் போன்ற படங்களில்,
நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது 22 வயதாகும் நடிகை ஷிவானி நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது , என்னுடைய வாழ்க்கையிலேயே இதுவரை யாருமே என்னை காதலித்தது கிடையாது .
அப்படி என்னை காதலிக்கிறேன் என்று யாரும் சொல்லியதும் கிடையாது என்று கூறிஇருந்தார் நடிகை சிவானி நாராயணன். இதை பார்த்த ரசிகர்கள் நாங்கள் இருக்கோம் காதலை சொல்ல என்று கூறி வருகின்றனர்…