April 28, 2024

யாருமே என்னை காதலிக்கல ..!! நானும் அழகா தானே இருக்கேன் ..!! புலம்பிய கமல் பட நடிகை ..!! காதலை சொல்ல வரிசைக்காட்டி நிற்கும் ரசிகர்கள் ..!!

பொதுவாகவே சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு காதல் டார்ச்சர் அதிகமாகவே இருக்கும் . அப்படி இருக்கும்போது என்னை இதுவரை யாருமே காதலித்தது கிடையாது என்று வெளிப்படையாக கூறியுள்ளார் கமல் பட நடிகை ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை ஷிவானி நாராயணன்  தான் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷிவானி நாராயணன்.

பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில்  நடித்திருந்தார் நடிகை ஷிவானி  நாரயணன் . இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமான ஷிவானிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது . அந்த வகையில் கடந்த வருடம்,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஷிவானி நாராயணன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வீட்டில் விசேஷம் ,டிஎஸ்பி ,நாய் சேகர் ரிட்டன்ஸ் ,பம்பர் போன்ற படங்களில்,

நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது 22 வயதாகும் நடிகை  ஷிவானி நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது , என்னுடைய வாழ்க்கையிலேயே இதுவரை யாருமே என்னை காதலித்தது கிடையாது .

அப்படி என்னை காதலிக்கிறேன்  என்று யாரும் சொல்லியதும் கிடையாது என்று கூறிஇருந்தார்  நடிகை சிவானி நாராயணன்.  இதை பார்த்த ரசிகர்கள் நாங்கள் இருக்கோம் காதலை சொல்ல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *