தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் கலக்கி கொண்டு வருபவர் விஜய் ஆண்டனி. இதனிடையே பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . இதில் மூத்த மகளான மீரா கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இந்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவருடைய மகளின் திடீர் மரணத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை . மேலும் சமீபத்தில் தான் பெரிய விபத்திலிருந்து மீண்டு வந்தார் நடிகர் விஜய் ஆண்டனி . இப்படி இருக்கும் நிலையில் மகளின் திடீர் மரணம் விஜய் ஆண்டனியை பெரிய அளவில் உலுக்கியது .
இந்நிலையில் தன்னுடைய மகள் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி . அதில், என்னுடைய மகள் மீரா மிகவும் அன்பானவன், தைரியமானவள் ,அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி ,மதம், பணம் ,பொறாமை, வலி ,வறுமை, வன்மம்,
இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள் , என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள் , அவளுடன் நானும் இறந்துவிட்டேன் ,நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன், அவள் பெயரில் நான் செய்ற போகும் நல்ல காரியங்கள்,
— vijayantony (@vijayantony) September 21, 2023
அனைத்தையும் அவளை தொடங்கி வைப்பாள் என்று உருக்கமாக பேசியிருந்தார் விஜய் ஆண்டனி.இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறிய வருகின்றனர்…