April 28, 2024

என்னுடைய மகளின் பெயரில் இதை செய்யப்போகிறேன் ..!! உருக்கமாக பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ..!! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள் ..!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் கலக்கி கொண்டு வருபவர் விஜய் ஆண்டனி.   இதனிடையே பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  இதில் மூத்த மகளான மீரா கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இந்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவருடைய மகளின்  திடீர் மரணத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை . மேலும் சமீபத்தில் தான் பெரிய விபத்திலிருந்து மீண்டு வந்தார் நடிகர்  விஜய் ஆண்டனி . இப்படி இருக்கும் நிலையில் மகளின் திடீர் மரணம் விஜய் ஆண்டனியை பெரிய அளவில் உலுக்கியது .

இந்நிலையில் தன்னுடைய மகள் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி . அதில்,  என்னுடைய மகள் மீரா மிகவும் அன்பானவன், தைரியமானவள் ,அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த  ஜாதி ,மதம், பணம் ,பொறாமை, வலி ,வறுமை, வன்மம்,

இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள் , என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள் , அவளுடன் நானும் இறந்துவிட்டேன் ,நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன், அவள் பெயரில் நான் செய்ற போகும் நல்ல காரியங்கள்,

 

அனைத்தையும் அவளை தொடங்கி வைப்பாள் என்று உருக்கமாக பேசியிருந்தார் விஜய் ஆண்டனி.இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறிய வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *