தற்போது தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இதனாலேயே இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் தான் அதிகமாக இருக்கிறது. இதனால் விஜய் சேதுபதியை பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி இருக்கும் நிலையில் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று விஜய் சேதுபதியிடம் ஆசையை கூறியிருக்கிறார் முன்னணி நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் ஷாருக்கான் தான் . சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில்,
வெளியான திரைப்படம் தான் ஜவான். இந்தப் படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா முப்பையில் நடைபெற்றது . அப்போது பேசிய விஜய் சேதுபதி,
ஷாருக்கான் அன்பை மட்டுமே கொடுக்கிறார், யாராவது ஷாருக்கான் என்று எழுதினால் கூட அதை கட்டிப்பிடிக்கலாம் , ஐ லவ் யூ சார் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான் , ஐ லவ் யூ டு , நாம ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளலாம். ரெண்டு பேரும் சேர்ந்து,
நிறைய படங்களில் நடிக்கலாம் என்று கூறியிருந்தார். இதற்கு நடிகர் விஜய் சேதுபதியும் இது தப்பு இல்ல சார், நம்ம ரெண்டு பேரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று விளையாட்டாக கூறியிருந்தார்…