தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் . எல்லா நடிகர்களும் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்து வரும் நிலையில் அஜித் மட்டும் ஒரு படம் நடிப்பதே பெரிய விஷயமாக இருந்து வருகிறது . அப்படி துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வருகிறது.அஜித்தும் இதை கண்டுக்கொள்ளாமல்,
ஊர் ஊராக சுற்றி வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் 400 கோடி பட்ஜெட்டில் ராஜ ராஜ சோழனாக அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதை மையமாக வைத்து ஒரு படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டாராம்,
இயக்குனர் விஷ்ணுவர்தன் . இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா , ஆரம்பம் போன்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார். இதன்பிறகு இந்த கதையை சொல்லி அஜித்திடமும் சம்மதம் வாங்கிய விஷ்ணுவர்தனுக்கு திடீரென பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது .
இதன்பிறகு அஜித்தும் வேற படங்களில் நடித்து வந்ததால் இவர்களுடைய கூட்டணி சேராமல் இருந்தது . இதை அடுத்து கடந்த வருடம் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . அப்போதிலிருந்து அஜித்துக்கு ,
வரலாற்று படங்கள் மீது அதிக ஆர்வம் வந்துள்ளதாம் . இதனால் விடாமுயற்சி படத்திற்கு பிறகு கண்டிப்பாக இவர்களுடைய கூட்டணி மீண்டும் ஒன்று சேரும் என்று தகவல் வெளியாகியுள்ளது …