தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வடிவேலுவின் நகைச்சுவை ரசிகர்களை வயிறு குழுங்க சிரிக்க வைக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அப்படி கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யாணி என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகர் வடிவேலு. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த,
வடிவேலு ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை கலக்கி வந்த எல்லாம் முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார் நடிகர் வடிவேலு. இப்படி புகழின் உச்சத்தையே தொட்ட வடிவேலு ஒரு கட்டத்தில் ,
தன்னுடைய தவறான பேச்சால் பெயரையே கெடுத்துக் கொண்டார் . இதனால் சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார் . இதை அடுத்து பல வருடங்கள் கழித்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் வடிவேலு. இதைத்தொடர்ந்து மாமன்னன்,
சந்திரமுகி 2 போன்ற படங்களிலும் நடித்திருந்தார் . இப்படி நம்மையெல்லாம் சிரிக்க வைத்த வடிவேலு இத்தனை கோடிக்கு சொந்தக்காரர் என்பது அனைவருக்கும் ஆச்சிரியமாகத்தான் உள்ளது. அந்த வகையில் ஒரு படத்திற்கு நாள் முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்,
நடிகர் வடிவேலு . அது மட்டுமல்லாமல் இவரிடம் ஏகப்பட்ட சொத்துக்கள் மற்றும் விலையை உயர்ந்த கார்களையும் உள்ளதாம் .அப்படி இவருடைய மொத்த சொத்தையும் கூட்டி கழித்து பார்த்தால் கிட்டத்தட்ட 130 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது…