தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் லியோ படத்தை முடித்த விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் . இப்படி விஜய் இன்று ஒரு முன்னணி நடிகராக வருவதற்கு அவருடைய அப்பாவான எஸ் ஏ சந்திரசேகர் எப்படி ஒரு காரணமாக இருந்தாரோ,
அதேபோல விஜயகாந்த் அவர்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார் . அந்த வகையில் நடிகர் விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படுதோல்வியை சந்தித்தது . இதன்பிறகு விஜய்யின் இரண்டாவது படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் நடிகர் விஜயகாந்த் .
இந்த படத்திற்கு பிறகு தான் விஜய்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அன்று விஜய்க்காக சம்பளமே வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் நடிகர் விஜயகாந்த் . ஆனால் அவருடைய மகனை தூக்கி விட யோசிக்கிறார் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த்திடம்,
பட்ட நன்றி கடனை அடைக்க நேரம் வந்தாச்சு. அதாவது தற்போது விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் படைத் தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார் . இந்த படத்தில் விஜய்யை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை,
நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . ஆனால் இதில் விஜய் நடிப்பாரா என்பது சந்தேகம் தான் , இருந்தாலும் விஜய் எடுக்கும் முடிவிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது …