April 25, 2024

எல்லா புகழும் விக்னேஷ் சிவனுக்கே ..!! அவர் இல்லைனா நான் இல்ல ..!! கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ந்த நயன்தாரா ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் , முன்னணி நடிகையாகவும் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா . தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா ஐயா என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார்.  பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து,

முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை நயன்தாரா . குறிப்பாக அப்போது பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா கடைசியில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மேலும் திருமணத்துக்கு பிறகு கணவருடன் சேர்ந்து,

பல தொழில்களை செய்து வருகிறார் நடிகை நயன்தாரா.  இப்படி இருக்கும் நிலையில் நயன்தாரா தொடங்கிய பெமி நயன் என்ற பிராண்டுக்காக விழா ஒன்று நடந்தது . அந்த விழாவில் பேசிய நயன்தாரா விக்னேஷ் சிவன் வந்ததால் தான் என்னுடைய வாழ்க்கையே ஒளிமயமானது.

அவரால் தான் நான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன்.  என்னுடைய வெற்றிக்கும் , சந்தோஷத்திற்கும் முக்கிய காரணமே என்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் தான் என்று கூறியிருந்தார் . தற்போது அந்த விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *