தற்போது இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் அட்லீ . ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார் அட்லீ . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெறி ,மெர்சல் ,பிகில் ,
போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் அட்லீ . இப்படி இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் இவருக்கு ஷாருக்கானை வைத்து இயக்கும் வாய்ப்பு அமைந்தது . அப்படி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட,
இயக்குனர் அட்லீ ஜவான் படத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார். அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ஐந்து நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . இதனால் விரைவில் இந்த திரைப்படம் 1000 கோடியை ,
தொட்டு விடும் என்று கூறப்படுகிறது .ஆனால் தமிழ் படங்களை காப்பியடித்து எடுத்தது போலவே ஜவான் படத்தையும் பல படங்களில் இருந்து காப்பி அடித்து எடுத்திருக்கிறார் இயக்குனர் அட்லீ . இருந்தாலும் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளதால் இயக்குனர் அட்லீக்கு
60 கோடி சம்பளமாக கொடுத்துள்ளாராம் ஷாருக்கான் . மேலும் இயக்குனர் அட்லீ யின் குருநாதரான இயக்குனர் ஷங்கரின் சம்பளமே 50 கோடி தான் . இதைப் பார்த்த ரசிகர்கள் காப்பியடித்தே கல்லா கட்டி விட்டாரே என்று கூறி வருகின்றனர்…