தற்போது தமிழ் சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக கலக்கிக்கொண்டு வருபவர் நடிகை நயன்தாரா . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று தமிழ் சினிமாவில் தனித்து நிற்கிறார் நடிகை நயன்தாரா . மேலும் ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த நயன்தாராவுக்கு சமீபத்தில் வெளியான எந்த படங்களுமே கை கொடுக்கவில்லை.
அப்படி இருந்தும் கூட இவருடைய சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டுதான் போகிறது . அந்த வகையில் ஜவான் படத்திற்காக 12 கோடி சம்பளம் வாங்கி இருந்தார் நயன்தாரா . இதை அடுத்து நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்க உள்ள எல்ஐசி என்ற,
படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ,எஸ் ஜே சூர்யா, கீர்த்தி செட்டி போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நயன்தாரா ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக,
தகவல் வெளியானது. ஆனால் அந்த கெஸ்ட் ரோல்க்கும் நயன்தாரா 12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது . இதனால் தயாரிப்பாளர் இவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று கூறி இருக்கிறார் . மேலும் நயன்தாராவும் தன்னுடைய கணவரின் படம் என்று,
சம்பளத்தை குறைக்காமல் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கணவரை விட பணம் தான் முக்கியமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…