தற்போது தமிழ் சினிமா உலகில் திரிஷாவின் பிரச்சனைதான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது . அப்படி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் திரிஷாவை மிகவும் தரகுறைவாக பேசியிருந்தார் மன்சூர் அலிகான் . இதனால் தற்போது திரிஷாவுக்கு ஆதரவாக பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர் . ஆனால் இன்று திரிஷாவுக்கு ஆதரவு கொடுக்கும் பிரபலங்கள் இந்த நடிகைக்கு ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது .
அவர் வேறு யாருமில்லை நடிகை விஜயலட்சுமி தான். தமிழில் வெளியான பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான விஜயலட்சுமி சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் என்று பரபரப்பு புகாரை கூறியிருந்தார். ஆனால் இதற்கு சீமான் விஜயலட்சுமியை விபச்சாரி கூறியிருக்கிறார் . இதனால் நீதிமன்றத்தில் ,
புகார் எல்லாம் அளித்திருந்தார் விஜயலட்சுமி . ஆனால் அப்போது விஜயலட்சுமிக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த எந்த பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை . இன்னும் சொல்லப் போனால் குஷ்புவெல்லாம் விஜயலட்சுமியை சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. இது என்ன நியாயம் என்று பலரும் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்…