சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் . அபூர்வராகங்கள் என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் இதுவரை 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அப்படி சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த வருகிறது .
மேலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்று இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி அந்த ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது வழியில் உத்தி ரபிரதேசம் மாநிலம் வந்ததும் அந்த மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தை ,
சந்தித்து இருந்தார் ரஜினிகாந்த் . குறிப்பாக அவரை சந்தித்தது மட்டுமல்லாமல் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் ரஜினிகாந்த் . இதற்கும் அவருக்கு வயது வெறும் 51 தான் . அப்படி இருக்கும் போது எப்படி 20 வயது இளையவரின் காலில் ரஜினிகாந்த் விழுந்தார் என்று அவருடைய ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அதில் அவர் கூறியதாவது , என்னை விட அவர் வயதில் இளையவராக இருந்தாலும் சந்நியாசி காலில் விழுவது என்னுடைய வழக்கம் . அதைத்தான் நான் செய்தேன் என்று கூறியிருந்தார் .
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அப்பா அம்மா காலில் தவிர வேறு யார் காலிலும் விழக்கூடாது என்று அவருடைய ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இதைப்பார்த்த ரசிகர்கள் ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என்று கூறிவருகின்றனர் …