பாபி சிம்ஹா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களின் நடித்து வந்த பாபி சிம்ஹா சூது கவ்வும் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் . இதன் பிறகு ஜிகிர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருதையும் வென்றார் நடிகர் பாபி சிம்ஹா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பெங்களூர் நாட்கள், இறைவி ,கவலை வேண்டாம், கருப்பன் ,சாமி ஸ்கொயர், பேட்ட ,
போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் படங்களில் ஹீரோ , குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படத்தில் தான் வில்லனாக இருக்கிறார் என்று பார்த்தால் நிஜத்திலும் வில்லனாக,
இருக்கிறார் நடிகர் பாபி சிம்ஹா . அந்த வகையில் கொடைக்கானலில் ஆடம்பர பங்களா ஒன்றை கட்டி வருகிறாராம் பாபி சிம்ஹா. இப்படி இருக்கும் நிலையில் அந்த பங்களாவை கட்டிக் கொடுக்கும் காண்ட்ராக்டருக்கும் இவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பிறகு தன்னுடைய வில்லத்தனத்தை அவரிடம் காட்டி இருக்கிறார் பாபி சிம்ஹா. அந்த வகையில் கேஜிஎப் படத்தின் வில்லனான ராமச்சந்திர ராஜுவை அழைத்துக் கொண்டு அந்த காண்ட்ராக்டரை மிரட்டியது மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் கொடுத்திருக்கிறார் பாபிசிம்ஹா .
இதனால் தற்போது பாபி சிம்ஹா மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது வழக்குப் போட்டு இருக்கிறாராம் அந்த காண்ட்ராக்டர் . சுமுகமாக முடிய வேண்டிய விஷயத்தை பணம் உள்ளது என்ற திமிரில் பாபி சிம்ஹா இப்படி செய்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…