தற்போது விலைவாசியை விட சினிமா நடிகர்களின் சம்பளம்தான் நாளுக்கு நாள் ஏறி கொண்டே போகிறது . அப்படி ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் ஒரு இந்திய நடிகர் நிலாவில் பல ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருக்கிறாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் ஷாருக்கான் தான் . பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான தீவானா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ஷாருக்கான் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக மாறினார். அதுவும் தமிழில் வெளியான உயிரே , ஹே ராம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகர் ஷாருக்கான் . அதுமட்டுமல்லா மல் ,
இன்று இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது . இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வரும் ஷாருக்கானுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருக்கிறதாம். இந்நிலையில் நிலாவில்,
பல ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறாராம் நடிகர் ஷாருக்கான் . அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷாருக்கானின் வெறித்தனமான ரசிகை ஒருவர் ஷாருக்கானின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நிலாவில் ஒரு சிறிய நிலத்தை வாங்குகிறாராம் .அப்படி கொஞ்சம் கொஞ்சமாக,
சேர்த்த அந்த நிலம் தற்போது பல ஏக்கர்கள் ஆக மாறி உள்ளதாம் . மேலும் நிலாவில் ராக்கெட் விடுவதையே பெருமையாக பேசி வரும் நிலையில் ஷாருக்கான் நிலாவில் பல ஏக்கர் நிலம் வைத்துள்ளது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது…