தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்து க்கு பிறகு தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய் . இதனால் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வருவதற்கு திட்டமிட்டு வருகிறார் நடிகர் விஜய் . அந்த வகையில் சமீபத்தில் கூட பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து,
சான்றிதழ்களையும் , பரிசுகளையும் வழங்கி இருந்தார் நடிகர் விஜய். இதனால் விஜய்க்கு மேலும் செல்வாக்கு அதிகரித்தது. இப்படி இருக்கும் நிலையில் விஜய் அதற்கு சம்மதித்தால் அவருடன் கூட்டணி வைப்போம் என்று கூறி இருக்கிறார் உதயநிதி . அந்த வகையில்,
ஆரம்பத்தில் உதயநிதியும் விஜய்யும் நல்ல நண்பர்களாக தான் இருந்து வந்தனர் . இடையில் ஏதோ விரிசல் ஏற்பட்டுள்ளது . இருந்தாலும் தற்போதும் விஜய்யுடன் உதயநிதி பேசிக்கொண்டு வருவதாக தான் கூறியிருந்தார். இப்படியொரு நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய,
உதயநிதி, விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது , அவர் அரசியலுக்கு வருவது எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை . அவருக்குன்னு ஒரு சில கொள்கைகள் இருக்கும் . எங்களுடைய இயக்கத்திற்கும் ஒரு சில கொள்கைகள் இருக்கிறது.
இரண்டு கொள்கைகளும் ஒன்றாக போகிற மாதிரி சூழ்நிலை ஏற்பட்டால், அவருடன் கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசிப்போம் என்று கூறியிருந்தார் உதயநிதி . இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு உதயநிதி இப்போதே கொக்கி போடுகிறாரே என்று கூறி வருகின்றனர்…