தன்னுடைய மகளை தனுஷ் பிரிந்ததிலிருந்தே அவர் மீது மிகப்பெரிய கோபத்தில் இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அப்படி இருந்தும் கூட ஜெயிலர் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் நடிகர் தனுஷ் . இந்நிலையில் அந்த நடிகர் தான் வேண்டும் என்று ரஜினியும் , தனுஷும் மாறி மாறி போட்டி போட்டு வருகிறார்களாம் . அந்த வகையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல் ,விஜய் ,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து விட்டார் . ஆனால் அஜித் மற்றும் தனுசை,
வைத்து இன்னும் எடுக்கவில்லை . இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் அஜித்துக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுக்க சொல்லி இயக்குனர் லோகேஷுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம் . ஆனால் நடிகர் தனுஷ் என்னுடைய,
படத்தில் தான் அஜித் நடிக்க வேண்டும் என்று கூறி வருகிறாராம் . அது மட்டுமில்லாமல் எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை அஜித் என்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். யார் படத்தில் நடிக்க வேண்டும் என்று,
அஜித் தான் முடிவு செய்யனும் . ஆனால் நடிகர் அஜித்துக்கு அவருடைய விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு நேரம் இல்லாத போது எப்படி இவர்களுடைய படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது…