தற்போது சமீப காலமாக தமிழ் சினிமாவிலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை வளர்த்து விடுவதற்காக பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் பல பேரின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. குறிப்பாக பாலிவுட் சினிமா உலகில்வாரிசு அரசியல் மட்டும் தான்,
நடந்து வருகிறது . இதனால்தான் சுஷாந்த் சிங் என்ற நடிகர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவிலும் அதே விஷயம் நடந்து வருகிறது . அந்த வகையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனான விஜய்யை நடிகராக்கி,
அழகு பார்த்தார். அப்படி விஜய்யை நடிகராக்குவதற்காக பல்வேறு வேலைகளை செய்தார் எஸ் ஏ சந்திரசேகர். இதை அ டுத்து தற்போது விஜய் யின் மகன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அப்படி அவர் இயக்கும் முதல் திரைப்படத்தையே லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது ,
தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெரிய பெரிய இயக்குனர்களை வைத்து படம் எடுத்து வரும் லைக்கா நிறுவனம் விஜய் யின் மகன் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் . ஆனால் பல உதவி இயக்குனர்கள் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு ,
தயாரிப்பாளர் கிடைக்காமல் தவித்துக் கொண்டு வருகின்றனர் . இதைப்பார்த்த ரசிகர்கள் திறமையை பார்த்து மட்டும் தான் வாய்ப்பு கொடுக்கணும் , பணத்தைப் பார்த்து வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர்…